வசந்தகுமார் என்றால் காங்கிரஸ்.. காங்கிரஸ் என்றால் வசந்தகுமார் – கே.எஸ்.அழகிரி.!

Default Image

 உள்ளத்தால், அரசியலால், தொழிலால், புகழால் உயர்ந்தவர் வசந்தகுமார் என கே.எஸ். அழகிரி  இரங்கல் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி தொகுதி எம்.பியும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராக இருந்த H.வசந்தகுமார் கடந்த 10-ம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிக்சை பெற்றுவந்த நிலையில், சிகிக்சை பலனின்றி H.வசந்தகுமார் காலமானார்.

H.வசந்தகுமார் மறைவிற்கு பல தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ். அழகிரி இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், வசந்தகுமாரின் மறைவு தமிழக காங்கிரசுக்கு பேரிழப்பு. கொரோனா காலத்தில் தனது தொகுதிக்கு வாரி வாரி வழங்கியவர் வசந்தகுமார். இவரது இழப்பு  மிகுந்த வருத்தமளிக்கிறது.

மேலும்,  உள்ளத்தால், அரசியலால், தொழிலால், புகழால் உயர்ந்தவர் வசந்தகுமார், வசந்தகுமார் என்றால், காங்கிரஸ் என்றால் வசந்தகுமார் என வாழ்ந்தவர் என  கே.எஸ். அழகிரி  இரங்கல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்