நாங்குநேரியில் விதிமுறைகளை மீறிய வசந்தகுமார் ! போலீசார் விசாரணை

Default Image

தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர்.
நாங்குநேரி தொகுதியில் வாக்குப் பதிவு இன்று நடைபெற்று வருகிறது.மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.இந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை மீறி நாங்குநேரி தொகுதிக்குள் நுழைய முயன்றதாக கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமாரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். கலுங்கடி பகுதியில் தனது ஆதரவாளர்களுடன் வசந்தகுமார் சென்றுகொண்டிருந்த போது நாங்குநேரி போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்