பழக்கடைகளை பந்தாடிய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு அதிரடி மாற்றம்…..

Published by
Kaliraj

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமுக இடைவெளியை கடைபிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை சமூக இடைவெளி இன்றி பழங்களை விற்பனை செய்த மூன்று கடைகளில் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் திரு. சிசில் தாமஸ் அவர்கள் பழங்களை கீழே தள்ளி கடைகளை காலிசெய்தார்.  இது தொடர்பான  வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த வாணியம்பாடி நகராட்சி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் பல்வேறு கட்சிகளிடம் இருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில்,  இன்று  காலை 10 மணிக்கு அந்த நிகழ்வு நடந்த இடத்திற்கு  நேரில் சென்ற நகராட்சி ஆணையர், பழ கடை உரிமையாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கி தனது செயலுக்கு வருத்தமும் தெரிவித்தார். மேலும் விற்பனை செய்யும் போது சமூக இடைவெளி விட்டு மீண்டும் விற்பனை செய்யவேண்டும் எனவும் அவர்களுக்கு  அறிவுறுத்தினார்.  இதற்கு மத்தியில், இவரின் அந்த மனித தன்மையற்ற செயலை மனித உரிமை ஆணையம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்ததோடு நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் விடுத்தது.  இந்த நிலையில், தற்போது வாணியம்பாடி நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ்  காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.  நகராட்சி நிர்வாக ஆணையர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்

Published by
Kaliraj

Recent Posts

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

14 minutes ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

50 minutes ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

53 minutes ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

2 hours ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

2 hours ago

“சாதி சான்றிதழ்களில் எழுத்துப் பிழைகள் இருக்கக் கூடாது”- உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…

3 hours ago