சென்னை-நெல்லை இடையே வந்தேபாரத்; ஆகஸ்ட்-6 இல் பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.!

VandeBharath 3tn

சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் தமிழகத்தின் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை பிரதமர் மோடி, வரும் ஆகஸ்ட்-6 ஆம் தேதி கொடியசைத்து துவங்கி வைக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் அதிவிரைவு ரயில் என அழைக்கப்படும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இந்தியாவில் 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இயக்கப்பட்டு வருகின்றன.

சென்னை-நெல்லை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலோடு தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும் மூன்றாவது அதிவிரைவு ரயில் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் 658 கிமீ தொலைவை 8 மணிநேரத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் கடக்கும் எனவும்,எட்டு பெட்டிகளுடன் இயக்கப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VBChn-Nel
VBChn-Nel [Image-Twitter/@Porunaicity]

மேலும் மதுரை மற்றும் திருச்சி என இரண்டு நிறுத்தங்களில் மட்டும் இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தப்படுகிறது. இந்தியாவில் இதுவரை 25 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் சென்னை-மைசூர் மற்றும் சென்னை-கோவையை அடுத்து வரும் ஆகஸ்ட்-6 ஆம் தேதி முதல் தமிழக்தில் மூன்றாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்