வெளிநாடுகளில் சிக்கி தவித்த 706 பேர் தமிழகம் வருகை.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் வண்ணம் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், வெளிநாடுகளில் சிக்கி தவித்த, தமிழக மக்கள் மீண்டும் தமிழகம் வர இயலாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில், இவர்களை மீண்டும் அழைத்து வர, பல ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு மட்டும் இதுவரை 43 ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். அந்த வகையில் தற்போது, அமெரிக்காவின் சிகாகோ நகரில் இருந்து 7 குழந்தைகள், 30 பெண்கள் உள்பட 68 பேரும், வியட்நாமில் இருந்து 3 குழந்தைகள், 8 பெண்கள் உள்பட 72 பேரும் சென்னை வந்தனர்.
இதனையடுத்து, 6 சிறப்பு விமானங்களில் வந்த 706 பேரிடமும் குடியுரிமை மற்றும் சுங்க இலாகா சோதனை செய்யப்பட்ட பின், அவர்களுக்கு, சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்ட பின், தனிமைப்படுத்தல் முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மேலும், வியட்நாமில் இருந்து வந்த 7 பேர் மட்டும் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…