சென்னை:தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவர்கள் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்தது.எனினும்,கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிறு ஆண்டு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையில்,வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் பணிபுரியும் 70 ஊழியர்களுக்கு முன்னதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில்,கடந்த ஜனவரி 17 ஆம் தேதி முதல் பூங்கா மூடப்பட்டது.இதனையடுத்து,தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையொட்டி,இரவு நேர ஊரங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் போடப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு நீக்கியது.
இந்நிலையில்,வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் இன்று முதல் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவர்கள் என பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததால் வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் திறக்கப்படுவதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும்,பார்வையாளர்கள் அனைவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறும் பூங்கா நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…