வானதி சீனிவாசன், கமல்ஹாசன் பொதுமக்களையும் நேரில் சந்தித்தும், ஆட்டோவில் பயணித்தும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலை தொடர்ந்து, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தற்போது வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, நேற்று கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடம் பாஜக வேட்பாளர் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், கோவை தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனும், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசனும் வாக்கு சேகரிக்க தொடங்கிவிட்டனர். இதனால், இரண்டு வேட்பாளர்களும் பொதுமக்களையும் நேரில் சந்தித்தும், ஆட்டோவில் பயணித்தும் ஆதரவு திரட்டி வருகின்றனர்.
இன்று காலை கமல்ஹாசன் கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் பொதுமக்களுடன் நடைபயிற்சி மேற்கொண்டார். முதலில் கமல்ஹாசன் நடைப்பயிற்சி மேற்கொண்டது அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை. சிறிது நேரத்துக்குப் பின்னரே கமல் என தெரிந்தது. அப்போது சாலையோரம் நடந்தவாறு வாக்கு சேகரித்தார்.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் கமல் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…