இறந்து போன காங்கிரஸ் கட்சிக்கு, ராகுல் காந்தியின் நடை பயணம் எந்த பயனையும் தர போவதில்லை என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன்.
காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி இன்று முதல் பாரத ஒற்றுமை யாத்திரை எனும் பாதயாத்திரை மூலம் 150 நாட்களில் கன்னியாகுமரி தொடங்கி 3,570 கிமீ தூரம் பயணித்து காஷ்மீர் வரை சென்றடைய உள்ளார்.
இதற்கு பல அரசியல் கட்சியினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். வழக்கம் போல பாஜகவினர் இந்த யாத்திரையை விமர்சித்து வருகின்றனர். அதில் கோவை தெற்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
அவர் ஒரு விழாவில் பேசுகையில், ‘ காங்கிரஸ் கட்சி இறந்து போயுள்ளது.அக்கட்சிக்கு, ராகுல் காந்தியின் நடைபயணத்தின் மூலம் உயிரூட்ட முடியுமா என முயற்சி செய்கிறார்கள். காங்கிரஸ் ஒரு மூழ்கிய கப்பல். ராகுல் காந்தி நடந்தாலும் சரி, ஓடினாலும் சரி, மாரத்தான் ஓடினால் கூட எந்த பயனும் இல்லை ‘ என கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…
சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…
சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…
பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…
சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…