கிளாசிக் செஸ் போட்டியில் 2500 ELO புள்ளிகளை பெற்று வைஷாலி 84வது கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றுள்ளார். ஸ்பெயின் நாட்டில் நடைபெற்ற எல்லோபிரேகாட் ஓபனில் 2 வெற்றிகளை பதிவு செய்ததன் மூலம் 2500 புள்ளிகளை கடந்தார்.
இதன்மூலம் அவர் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றுள்ளார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்லும் 3 இந்திய வீராங்கனை ஆவார். வைஷாலி தமிழக செஸ் வீரரும், கிராண்ட் மாஸ்டருமான பிரக்ஞானந்தாவின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற வைஷாலி..!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற வைஷாலிக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில்,இந்தியாவின் 3வது பெண் கிராண்ட்மாஸ்டர் மற்றும் தமிழ்நாட்டின் முதல் பெண் கிராண்ட்மாஸ்டர் ஆனதற்கு வாழ்த்துக்கள்.
உங்கள் சகோதரர் பிரக்ஞானந்தாவுடன் இணைந்து கேண்டிடேட்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் சகோதரி – சகோதரர் ஜோடியாக நீங்கள் வரலாறு படைத்துள்ளீர்கள். உங்கள் சாதனைகள் குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.’ என பதிவிட்டுள்ளார்.
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று…