வேல் யாத்திரை : பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட 1330 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

Default Image

தடையை மீறி வேல் யாத்திரை நடத்தியதற்காக  பாஜக மாநில தலைவர் எல்.முருகன் உட்பட 1330 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 6ஆம் தேதி வரை பாஜகவினர் சார்பில் வேல் யாத்திரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்திருந்த நிலையில், தடையை மீறி பல மாவட்டங்களில் பாஜகவினர் வேல் யாத்திரை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டிசம்பர் 6-ஆம் தேதி இந்த யாத்திரை முடிவுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பாபர் மசூதி இடிப்பு தினமான அன்று பல சர்ச்சைகள்  ஏற்படும் என அரசியல் பிரபலங்கள் கோரிக்கை வைத்த நிலையில், டிசம்பர் 7ஆம் தேதி யாத்திரை முடிக்கப்படும் என பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஈரோட்டில் தடையை மீறி யாத்திரை மற்றும் கூட்டணி நடத்தியதாக பாஜக மாநில தலைவர் வேல்முருகன் உள்ளிட்ட 1,330 பேர் மீது ஈரோடு வடக்கு காவல் நிலையத்தில் 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen