திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த வைகோ

Default Image

அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் உடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சந்திப்பு மேற்கொண்டார். அதன்பின் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்பதே எங்கள் கணிப்பு என்றும் 4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலிலும் ஈடுபாடோடு தேர்தல் பணியில் ஈடுபட உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், பொன்னமராவதி பகுதியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது, அதற்கு காரணமான இருவரை கைது செய்ய வேண்டும் என்றும், பொது அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், நாடாளுமன்ற தேர்தலின்போது மதிமுகவை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டதற்கு ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்