வைகோவை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்த மலேசிய அரசுக்கு மத்திய அரசு கண்டனம்!

Default Image

வைகோவை மலேசியாவுக்குள் நுழைய விடாமல் தடுத்த மலேசிய அரசுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளதாக ம.தி.மு.க கூறியுள்ளது.

இது தொடர்பாக இந்திய அரசின் வெளியுறவு அமைச்சகத்தில் இருந்து வைகோவுக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், 2017 ஜூன் 9ஆம் தேதி கோலாலம்பூர் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தது குறித்துப் பிரதமருக்கு வைகோ கடிதம் எழுதியதைக் குறிப்பிட்டுள்ளது.

இது குறித்துக் கோலாலம்பூரில் உள்ள இந்தியத் தூதரகம் மலேசிய உள்துறை அமைச்சகத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகமும் டெல்லியில் உள்ள மலேசியத் தூதரிடம் கண்டனம் தெரிவித்ததாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

source: dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்