இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் இவர்தான் பிரதமர்..! வைகோ அறிவிப்பு.!

Published by
மணிகண்டன்

I.N.D.I.A Alliance : இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ராகுல் காந்தி தான் பிரதமர் என வைகோ அறிவித்துள்ளார்.

ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) அமைக்கப்பட்டு தமிழகத்தில் பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் உட்பட தேசிய அளவிலில் பல்வேறு கட்சிகளை ஒன்றிணைத்து மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறது. NDA கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அதே போல, காங்கிரஸ்,, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, கம்யூனிஸ்ட் கட்சிகள் , விசிக, மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி (I.N.D.I.A) என்ற பெயரில் மக்களவை தேர்தலை எதிர்கொள்கின்றன. ஆனால் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் என இன்னும் அறிவிக்கவில்லை. ராகுல் காந்தி இந்தியா கூட்டணியின் பொதுவான முகமாக காண்பிக்கப்பட்டாலும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இப்படியான சூழலில், மதிமுக தலைவர் இன்று இந்தியா கூட்டணி பாஜக வேட்ப்பாளர் ராகுல் காந்தி என் அறிவித்துள்ளார். இன்று மதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சி தலைவர் வைகோ வெளியிட்டார். அதில், 74 தலைப்புகளின் கீழ் பல்வேறு வாக்குறுதிகள் அதில் குறிப்பிடபட்டு உள்ளது.

அப்போது பேசிய, வைகோ, இந்தியா கூட்டணி வெற்றிபெற்றால் ராகுல் காந்தி தான் பிரதமர் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதை மதிமுக வழிமொழிகிறது என தெரிவித்தார். இந்தியா கூட்டணியில் திருச்சி தொகுதியில் திமுக தலைமையில் மதிமுக போட்டியிடுகிறது.

Recent Posts

ரசிகர்களே ரெடியா? சேப்பாக்கத்தில் சென்னை – டெல்லி மோதல்! இன்று டிக்கெட் விற்பனை!

சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வரும் சூழலில் ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன்  காத்திருந்த சென்னை…

4 minutes ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் : “ஆபரேஷன் பிரம்மா” உதவிகரம் நீட்டிய இந்தியா!

பாங்காக் : மியான்மரில் கடந்த மார்ச் 28-ஆம் தேதி அன்று ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து,…

34 minutes ago

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…

60 minutes ago

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…

1 hour ago

லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…

2 hours ago

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு…இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…

2 hours ago