வைகோ பெயரில் போலி கணக்கு.! போலீசார் விசாரணை.!

Default Image

மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலவை எம்பியான வைகோ, தனது பெயரில் போலி ட்விட்டர் கணக்குகள் இருப்பதாகவும், அதன்மூலம் அவதூறாக கருத்துக்கள் பரப்புவதாகவும், அந்த நபர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை மாவட்ட காவல் மாவட்ட ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், வைகோ அளித்த புகாரின் பெயரில் சென்னை மத்திய சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், அந்த அடையாளம் தெரியாத நபர் மீது தகவல் தொழில்நுட்பப்பிரிவு 66டி பிரிவில் மோசடி செய்தனர். மேலும், அந்த போலி ட்விட்டர் கணக்கை முடக்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்