கடும் மழைப் பொழிவின் காரணமாக வைகை அணை தனது முழுக் கொள்ளளவினை எட்டியுள்ள நிலையில், உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு நீர் திறந்து விட, முதல்வர் நடவடிக்கை எடுக்க கோரி சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.
மதுரை : தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன்காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இதற்கிடையில், அணைகள் மற்றும் ஏரிகள் நிரம்பி வரும் நிலையில், பல இடங்களில் அணைகள் திறந்து விடப்பட்டுள்ளது. அந்த வகையில், வெங்கடேசன் எம்.பி. அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கடும் மழைப் பொழிவின் காரணமாக வைகை அணை தனது முழுக் கொள்ளளவினை எட்டியுள்ளது. ஆனாலும் தற்போது வரை உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு இன்னும் நீர் திறக்கப்படவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…