வைகை அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் போக சாகுபடிக்காக திறக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் மிக பெரிய வெற்றி என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து வரும் தண்ணீரால் சுற்று வட்டாரப்பகுதிகளில் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறும். இதிலிருந்து வரும் தண்ணீர் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும். இந்த அணை 71 அடி உயரம் கொண்டது. மேலும் இதில் 67.5 அடி அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் இங்கிருந்து பெரியார் பிரதான கால்வாய்க்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதிலிருந்து வரும் தண்ணீர் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும். வைகை அணையின் 7 பெரிய மதகுகள் வழியாக ஜூன் மாத முதல் போக சாகுபடிக்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் வைகை அணையை திறந்து வைத்தனர்.
இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, 14 வருடங்களுக்கு பிறகு முல்லை பெரியாறு அணையிலிருந்தும், 12 வருடங்களுக்கு பிறகு வைகை அணையிலிருந்தும் தண்ணீர் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது திமுக ஆட்சியின் மிக பெரிய வெற்றி என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சரித்திர சாதனை புரிந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…
டெல்லி : வக்பு வாரியம் என்பது இஸ்லாமிய மக்களால் தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களை நிர்வகிக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்பு ஆகும்.…
சென்னை : எம்.ஜி.ஆர் - சிவாஜி காலத்தில் இருந்து சினிமாவில் பாட துவங்கி, தற்போது அஜித் - விஜயை தொடர்ந்து…
ஆப்கானிஸ்தான் : அணியில் பந்துவீச்சில் தூண் என்றால் லெக்-ஸ்பின்னர் ரஷித் கான் என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அணியின் வளர்ச்சிக்கு…