12 ஆண்டுகளுக்கு பிறகு திறக்கப்பட்ட வைகை அணை..!

Published by
Sharmi

வைகை அணை 12 ஆண்டுகளுக்கு பிறகு முதல் போக சாகுபடிக்காக திறக்கப்பட்டிருப்பது தமிழக அரசின் மிக பெரிய வெற்றி என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையிலிருந்து வரும் தண்ணீரால் சுற்று வட்டாரப்பகுதிகளில் 45,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியை பெறும். இதிலிருந்து வரும் தண்ணீர் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும். இந்த அணை 71 அடி உயரம் கொண்டது. மேலும் இதில் 67.5 அடி அளவிற்கு தண்ணீர் இருப்பு உள்ளது. இதனால் இங்கிருந்து பெரியார் பிரதான கால்வாய்க்கு இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதிலிருந்து வரும் தண்ணீர் மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய இடங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லும். வைகை அணையின் 7 பெரிய மதகுகள் வழியாக ஜூன் மாத முதல் போக சாகுபடிக்காக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் தலைமையில் வைகை அணையை திறந்து வைத்தனர்.

இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, 14 வருடங்களுக்கு பிறகு முல்லை பெரியாறு அணையிலிருந்தும், 12 வருடங்களுக்கு பிறகு வைகை அணையிலிருந்தும் தண்ணீர் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது திமுக ஆட்சியின் மிக பெரிய வெற்றி என்றும், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சரித்திர சாதனை புரிந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

சித்திரைத் திருவிழா: உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்கப்படும் – சேகர்பாபு.!

மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…

25 minutes ago
பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

1 hour ago
ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

2 hours ago
ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

17 hours ago
பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

19 hours ago
வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

19 hours ago