நடிகர் விவேக் உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். இதைத்தொடர்ந்து, மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நடிகர் விவேக் முற்பகல் 11 மணிக்கு சுயநினைவின்றி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் விவேக் உடல்நிலையின் முன்னேற்றம் குறித்து 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதயத்தின் இடதுபுறம் இரத்தக்குழாயில் விவேக்கிற்கு 100% அடைப்பு இருந்தது.
நடிகர் விவேக் உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல எனவும், அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேக்கிற்கு ஏற்பட்டது இது முதல் மாரடைப்பு அவருக்கு ரத்தக் கொழுப்பு இருந்தது என மருத்துவமனை தரப்பில் விளக்கம் கொடுக்கபப்ட்டுள்ளது.
RT-PCR பரிசோதனை, சி.டி ஸ்கேனிலும் விவேக்கிற்கு கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே…
டெல்லி : மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற 2024 டி20 உலகக் கோப்பையை இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்திய…
அமெரிக்கா : நாட்டில் சட்டவிரோதமாக குடியேறியதாக 104 இந்தியர்களை அமெரிக்க ராணுவ விமானம் மூலம் நாடு கடத்தப்பட்ட விஷயம் பெரிய…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிப்ரவரி 6-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில், படம் கலவையான விமர்சனத்தை…
மகாராஷ்டிரா : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தலான வெற்றியை பதிவு செய்துள்ளது. …
புதுச்சேரி : காரைக்கால் கந்தூரி விழாவை முன்னிட்டு, அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என மாவட்ட புதுச்சேரி…