நடிகர் விவேக் உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். இதைத்தொடர்ந்து, மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், நடிகர் விவேக் முற்பகல் 11 மணிக்கு சுயநினைவின்றி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
தற்போது அவரது உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் விவேக் உடல்நிலையின் முன்னேற்றம் குறித்து 24 மணி நேரத்துக்கு பிறகே தெரியவரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதயத்தின் இடதுபுறம் இரத்தக்குழாயில் விவேக்கிற்கு 100% அடைப்பு இருந்தது.
நடிகர் விவேக் உடல்நலக்குறைவுக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டது காரணமல்ல எனவும், அவருக்கு எக்மோ கருவி பொருத்தப்பட்டுள்ளது. ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவேக்கிற்கு ஏற்பட்டது இது முதல் மாரடைப்பு அவருக்கு ரத்தக் கொழுப்பு இருந்தது என மருத்துவமனை தரப்பில் விளக்கம் கொடுக்கபப்ட்டுள்ளது.
RT-PCR பரிசோதனை, சி.டி ஸ்கேனிலும் விவேக்கிற்கு கொரோனா தொற்று இல்லை என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…