தடுப்பூசி செலுத்தும் பணியில் 13 மாவட்டங்களில் தொய்வு- தலைமைச் செயலாளர் இறையன்பு ..!

Default Image

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு உள்ளதாக தலைமைச் செயலாளர் இறையன்பு கூறியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டில் இருக்க தடுப்பூசியை மக்கள் செலுத்தி கொள்வதே முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. தடுப்பூசி குறித்து அரசு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நிலையில் பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், தமிழக அரசு மெகா தடுப்பூசி முகாம் அமைத்து தடுப்பூசி செலுத்தபப்ட்டு வருகிறது.  

தமிழகத்தில் கடந்த 12-ஆம் தேதி நடந்த தடுப்பூசி முகாமில் 28 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும். கடந்த 19 -ஆம் தேதி 16  லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் , 26-ஆம் தேதி 24  லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாரத்துறை தெரிவித்தது. இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதியுள்ள கடிதத்தில், தேனி, கோவை, திண்டுக்கல், திருச்சி, தேனி,கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணி மிகச்சிறப்பாக உள்ளதாகவும்.

விருதுநகர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தருமபுரி, அறந்தாங்கி, கடலூர், அரியலூர்,  வேலூர் ஆகிய 13 மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியில் தொய்வு உள்ளதாக கூறியுள்ளார். தடுப்பூசி செலுத்தும் பணியில் பின்தங்கிய மாவட்டங்கள் அதிக கவனம் செலுத்தவும் பின் தங்கியுள்ள மாவட்டங்கள் தடுப்பூசி செலுத்தும் பணியை இருமடங்காக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்