தமிழகத்தில் 18 வயது முதல் 44 வயது வரையுள்ளவர்களுக்கு நாளை முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆக்ஸிஜன் உதவி பெறும் வகையில் நடமாடும் ஆக்ஸிஜன் வாகனங்களை,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து,அமைச்சர் மா.சுப்பிரமணியன்,செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது,”ஊரடங்கு உத்தரவு மேலும் நீட்டிக்கப்படுமா? என்பது போக போகத்தான் தெரியும்.எனினும்,கொரோனா பரவலை தடுக்க முழு ஊரடங்கு மட்டுமே தீர்வாக உள்ளது.ஏனெனில்,முழு ஊரடங்குக்கு முன்னால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.ஆனால்,ஊரடங்குக்கு பிறகு தற்போது பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக,சென்னையில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல்,78 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு வந்துள்ளது.அதில் 69 லட்சம் தடுப்பூசிகள் ஏற்கனவே போடப்பட்டுள்ளது. மீதமுள்ள தடுப்பூசிகள் போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில்,18 வயது முதல் 44 வயது வரை உள்ளவர்களுக்கு தடுப்பூசி போட,மாநில சுகாதாரத்துறை சார்பில் ரூ.46 கோடி செலுத்தப்பட்டு,அதில் 9 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்துள்ளது.எனவே,18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தமிழக முதல்வர் நாளை (வியாழக்கிழமை) தொடங்கி வைப்பார்.அதில்,ஆட்டோ டிரைவர், ஆலை தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளில் உள்ள 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி போடப்படும்”,என்று கூறினார்.
சென்னை : தொலைக்காட்சி நிலையத்தின் "இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழா" மற்றும் சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்கள் இன்று…
சேலம் : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டி பகுதியில் வரும் அக்டோபர் 27-ஆம் தேதி நடைபெற…
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…