யூடிபர் மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி.
யூ-டியூபர் மதன்,பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் வீடியோ கேம்களை லைவ்வாக விளையாடி யூ-டியூபில் பதிவேற்றம் செய்து வந்தார். பின்னர்,இந்த வீடியோக்களானது, வீடியோ கேம் பிரியர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதையடுத்து, மதன் பிரபலமானார்.
இந்நிலையில், பெண்கள் குறித்து ஆபாசமாக அநாகரிகமான முறையில் பேசியதையடுத்து, இவர் மீது தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து, யூ-டியூபர் மதன் மீது சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் தொடர்பாக மதனை விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், மதன் விசாரணைக்கு ஆஜரகாமல் தலைமறைவாக இருந்து வந்த நிலையில், தருமபுரியில் உள்ள அவரது நண்பர் வீட்டில் பதுங்கியிருந்த போது, தனிப்படை போலீசாரால், ஜூன் 18-ம் தேதி கைது செய்யப்பட்டடார்.
இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்குமாறு பப்ஜி மதன் மனுத்தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் அவரது மனைவியான கிருத்திகா 8 மாத குழந்தையுடன் சிறையில் இருந்த நிலையில், கிருத்திகாவுக்கு ஜாமீன் வழங்கபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…