திருச்சியில் உயிரிழந்த பெண் உஷா கர்ப்பிணி அல்ல …

Default Image

வாகன சோதனையின் போது திருச்சியில் உயிரிழந்த பெண் உஷா கர்ப்பிணி அல்ல என பிரேதப்பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது. தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை சூரமங்கலத்தைச் சேர்ந்த ராஜா தனது மனைவி உஷாவுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற போது, வாகன தணிக்கைக்கு நிற்காமல் சென்றதால் காவல் ஆய்வாளர் காமராஜ் துரத்திச் சென்று உதைத்ததில் கீழே விழுந்து உஷா உயிரிழந்தார்.

உஷாவின் உடலை மடியில் வைத்துக் கொண்டு கதறியழுத அவரது கணவர் ராஜா, தனது மனைவி மூன்று மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பொதுமக்களின் போராட்டம் பெரும் வன்முறையாக மாறியது. இந்நிலையில் உஷாவின் உடற்கூறாய்வு முடிவுகளை, திருச்சி மருத்துவக்கல்லூரி டீன் அனிதா, மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தார். அதில் உயிரிழந்த உஷா கர்ப்பமாக இல்லை என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை தொடர்பாக மாவட்ட எஸ்.பி. கல்யாண் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு  தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்