ஸ்டுடியோ முதலாளிகளே உஷார்…உங்கள் கணினியை ஹேக் செய்ய காத்திருக்கும் ஹாக்கர்கள்..!

Published by
Surya

திண்டிவனத்தை அடுத்த அய்யன் தோப்பு பகுதியில் வசித்து வருபவர் கண்ணன். இவர் தனது வீட்டிலேயே சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை நடத்தி வருகிறார்.

இவர், வழக்கம்போல் தனது கணினியை ஆன் செய்துவிட்டு பணிகளை தொடங்கினார் அப்பொழுது அவருக்கு ஒரு இ-மெயில் வந்தது அதை பார்த்ததும், அவரின் கணினி தானாக நின்றது. இதனை கண்ட கண்ணன் மிகவும் குழப்பம் அடைந்தார்.

சிறிது நேரம் கழித்து கணினி தானாகவே இயங்க தொடங்கியது. ஒருவழியாக பிரச்சனை முடிந்தது என நினைத்த கண்ணனுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தது. திருமணம், காதுகுத்து உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் எடுத்த வீடியோக்களும் புகைப்படங்களும் காணாமல் போயினர். அதிர்ச்சி அடைந்த கண்ணனுக்கு மீண்டும் ஒரு அதிர்ச்சி குடுக்கும் வகையில் ஒரு இ-மெயில் வந்தது.

அந்த மின்னஞ்சலை வாசித்ததன் மூலம் தனது கணினியை ஹேக்கர்கள் ஹேக் செய்துள்ளனர் என தெரியவந்துள்ளது. மேலும் 1120 அமெரிக்க டாலர்கள் ஆன்லைனில் செலுத்தினால் மட்டுமே கண்ணனின் கணினியில் உள்ள அனைத்து பைல்களும் ஒப்படைக்கப்படும். அப்படி பணத்தை கொடுக்காவிட்டால் அனைத்து பைல்களையும் அழித்து விடுவேன் என அந்த ஹேக்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து காவல்துறையினரிடம் அண்ணன் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சைபர் கிரைம் உதவியுடன் ஹேக்கர் கும்பலில் செயல்படுபவர் யார்? ஏன் ஸ்டுடியோ முதலாளிகளே குறி வைக்கிறார்கள் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

மேலும், இதேபோன்ற ஒரு சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள நாங்குநேரியில் கடந்த 24 ஆம் தேதி நடந்ததாக கூறப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

3 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

9 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

9 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

9 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

9 hours ago