தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – அமைச்சர் கே.என்.நேரு

Published by
பாலா கலியமூர்த்தி

அரசாங்கத்தை பொறுத்தளவில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளது என அமைச்சர் கே.என் நேரு தகவல்.

இதுதொடர்பாக சென்னை அடையாறில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழகத்தில் கிட்டத்தட்ட புதிதாக 6 மாநகராட்சிகள், 30க்கும் மேற்பட்ட நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது.

பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன. தேர்தலுக்கான வார்டுகள் மறுவரையரை செய்ய வேண்டியுள்ளது.

வார்டு மறு வரையறை பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தி உள்ளது. மறுவரையறைக்காக 100 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டியுள்ளது. இந்த 100 நாட்கள் முடிந்த பிறகு, பொதுமக்களின் குறைகளை மீண்டும் களைந்திட மேலும் 30 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டியுள்ளது. அரசாங்கத்தை பொறுத்தளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளது.

நீதிமன்ற உத்தரவை பொறுத்து நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும். தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு முயற்சி எடுத்து வருவதாகவும், ஓரிரு மாதங்கள் கூடலாம் என்றும் அல்லது குறையலாம் அல்லது அதே நேரத்தில் நடத்தலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

22 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

58 mins ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

1 hour ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

2 hours ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

2 hours ago