நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஜனவரி இறுதிக்குள் முடிக்க வேண்டிய நிலையில் கூடுதல் நாட்களை அனுமதிக்குமாறு மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை 4 மாதத்தில் நடத்தி முடிக்க உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி ஜனவரி 27-க்குள் (அதாவது இன்று) தேர்தலை நடத்தி முடிக்க உத்தரவு பிறப்பித்தது. ஆனால், மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை இன்னும் நடத்தி முடிக்கவில்லை.
இந்நிலையில், 40 நாட்கள் கூடுதல் கால அவகாசம் கோரி தமிழக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழகத்திற்கு அறிவிக்கப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அட்டவணையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தேர்தல் நடத்த கூடுதலாக எடுத்துக்கொண்ட நாட்களுக்கு அனுமதி வழங்க மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். மேலும் மறைமுக தேர்தல் மார்ச் 4-ஆம் தேதி நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…
சென்னை : கமல்ஹாசன் கடைசியாக நடித்த இந்தியன் 2 படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து…
சென்னை : இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, சுவாசிகா ஆகியோர் நடித்துள்ள 'லப்பர்…
ஆந்திரா : ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் திருப்பதி கோவிலின் பிரசாத லட்டுவில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக ஆந்திர மாநில…