இன்று அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் தரம் உயர்வு ஓப்பந்தம் – துறை வாரியாக முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை!
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இன்று கையெழுத்தாகிறது.
அதன்படி,சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 10 மணிக்கு தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறைக்கும், புனேவில் உள்ள டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கும் இடையே அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை தொழில்நுட்ப மையங்களாக தரம் உயர்த்துவதற்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தாகிறது.
இதனைத் தொடர்ந்து,இன்று முதல் ஒவ்வொரு துறை வாரியாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.அதன்படி,இன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் இன்று ஆலோசிக்கிறார்.