192 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்- தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

Default Image

கொரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கையாக ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். இதனால், அனைத்து ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் நீக்கப்பட்டன. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ரயில் சேவை படிப்படியாக மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது. இந்நிலையில், 192 ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள் மீண்டும் இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, நாகர்கோவில், முத்துநகர் , உழவன் விரைவு ரயில்களில் ஏப்ரல் 1-ம் முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும். மேலும், ஏப்ரல் 16-ம் தேதி முதல் நெல்லை ,குமரி , பாண்டியன், பொதிகை, ராமேஸ்வரம்  உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்