rajnath singh - tn [file image]
ராமநாதபுரம் : மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாளை இரவு ராமநாதபுரத்திற்கு வருகிறார். நாளை மறுநாள் (ஜூன் 21) உலக யோகா தினம் நடைபெறுவதையொட்டி தனுஷ்கோடியில் நடைபெறும் விழாவில் கலந்துகொள்வதற்காக, உச்சிப்புளி INS பருந்து கடற்படை தளத்திற்கு வருகிறார்.
சர்வதேச யோகா தினம், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21-ல் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பல இடங்களில் யோகா தின நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், ராமநாதபுரத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராஜ்நாத் சிங், நாளை மாலை தனி ஹெலிகாப்டரில் ராமநாதபுரம் வருகை புரிந்து, மண்டபம் கடலோர காவல்படை முகாமிற்கு சென்று ஆய்வு நடத்துகிறார்.
பின்னர், உச்சிப்புளி ஐஎன்எஸ் பருந்து கடற்படை தளத்திலும் ஆய்வு நடத்துகிறார். அங்கு, கடலோரக் காவல்படை, விமானப்படை, கடற்படையினரின் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கு ராமநாதபுரம் கலெக்டர் மற்றும் எஸ்.பி. ஆகியோரும் அழைக்கப்பட்டுள்ளனர். ராஜ்நாத் சிங் வருகையை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு பலத்தப்பட்டுள்ளது.
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
சென்னை : அஜித்குமார் நடிப்பில் இறுதியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனால் இப்படம் எதிர்பார்த்த வெற்றியை…
லாகூர் : பாகிஸ்தானில் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றைய நாள் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலியா அணியும்,…
லாகூர் : 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய கிரிக்கெட்…
வாஷிங்டன்: அமெரிக்கா ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு டொனால்ட் டிரம்ப் செய்யும் அடுத்தடுத்த அதிரடி மாற்றங்கள் உலக அரசியலையே திரும்பி பார்க்க…
சென்னை : காங்கிரஸ் கட்சி என்றாலே அதில் உட்கட்சி பிரச்சனை அதிகம் இருக்கும் என்பது தொடர்கதையாகி வருகிறது. அதனை வெளிக்காட்டும்…