மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார்..! துரைமுருகன்

Default Image
மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார் என்று  திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் கூறுகையில், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அதிமுக அரசுக்கு வக்காலத்து வாங்குவதற்காக, தி.மு.க. துரோகம் செய்து விட்டதாக கூறுகிறார்.
குறிப்பாக  1989-ஆம் ஆண்டு அணையின் நீர்மட்டத்தை 145 அடியாக உயர்த்தி உத்தரவிட்டவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்ற உண்மையைக் கூட தெரிந்து கொள்ளாமல் தி.மு.க.வை கொச்சைப்படுத்துவது மத்திய அமைச்சருக்கு அழகல்ல. காவிரியிலும், மேகதாது அணை பிரச்சினையிலும் மத்திய பாஜக அரசு செய்துள்ள துரோகத்தை ஒருபோதும் தமிழக மக்களும், விவசாயிகளும் மறக்கவும், மன்னிக்கவும் மாட்டார்கள் என்றும் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்