பலத்த பாதுகாப்பு…இன்று புதுச்சேரி செல்லும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

Default Image

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்துள்ளார்.அவரை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்றனர்.

இந்நிலையில்,ஆவடியில் இருந்து இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புதுச்சேரி செல்கிறார். பின்னர்,அங்கு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அரவிந்தரின் 150 வது பிறந்த நாள் விழாவில் அமித்ஷா பங்கேற்கவுள்ளார்.

இதனையடுத்து,அரவிந்தர் ஆசிரமம்,மகாகவி பாரதியார் வாழ்ந்த இல்லம் ஆகியவற்றை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பார்வையிடுகிறார்.அதே சமயம்,புதுச்சேரியில் கிழக்கு கடற்கரை சாலையில் ரூ.70 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அமித்ஷா அடிக்கல் நாட்டுகிறார்.

மேலும்,புதுச்சேரியில் புதிதாக நியமிக்கப்பட்ட காவலர்களுக்கு அமித்ஷா பணிநியமன ஆணைகளை வழங்குகிறார்.இதனிடையே,மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையையொட்டி புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்