குஷ்பு உள்ளிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் மத்திய உள்துறை அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் நாளையுடன் நிறைவடைய உள்ளது. தேர்தல் பிரச்சாரம் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், குறிப்பாக மாநில தலைவர்களும், தேசிய தலைவர்களும் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, நேற்று இரவு சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, துறைமுகம் தொகுதியில் பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வத்துக்கு வாக்கு சேகரித்தார்.
இந்த நிலையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் குஷ்பு உள்ளிட்ட பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாண்டி பஜார் சாலையில் வாகனத்தில் சென்றவாறு பொதுமக்களிடம் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
இதையடுத்து, தனி விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் அமித்ஷா, ராமநாதபுரம், திருநெல்வேலியில் நடைபெறும் தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டு பாஜக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள உள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…