ஹத்ரஸ் மாவட்டத்தில் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து சீமான் டிவிட் செய்துள்ளார்.
உத்திரப்பிரதேசத்தின் ஹத்ரஸ் மாவட்டத்தில் செப்டம்பர் 14-ம் தேதி 19 வயது தலித் பெண் 4 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்நிலையில், அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பலர் தங்களது கருத்துக்களையும் இரங்களையும்,தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டிவிட்டர் பக்கத்தில் இது தொடர்பாக டிவிட் செய்துள்ளார். அதில், உத்திரப்பிரதேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டதை அறிந்து பேரதிர்ச்சி அடைந்தேன். அச்செய்தியைக் கேள்வியுற்ற நொடி முதல் அடைந்த வேதனையிலிருந்து மீள முடியாது தவித்து வருகிறேன்.
மேலும், கற்பனைக்குக்கூட எட்டாத பாலியல் பெருங்கொடுமையும், அதீத வன்முறையும் அந்த ஏழைப்பெண் மீது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. அவரது குடும்பத்தினரை இறுதிமரியாதையை கூட செலுத்தவிடாமல், உத்திரப்பிரதேச மாநில அரசு அவசர அவசரமாக அப்பெண்ணின் உடலுக்கு எரியூட்டியது ஏற்கவே முடியாத அரசப்பயங்கரவாதம்.
இந்நிலையில், இந்நாட்டின் குடிமகனாகப் பிறந்து அநீதிக்கு எதிராக எதுவும் செய்யவியலா இக்கையறு நிலை குற்றவுணர்வுக்குள் தள்ளுகிறது. அப்பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராக ஒவ்வொரு குடிமகனும் போர்க்குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
டெல்லி : உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…
கோவை : கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பூத் கமிட்டி மண்டல கருத்தரங்கம் ஏப்ரல் 26 மற்றும் 27…
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 2025 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்…
சென்னை : அதிமுக – பாஜக வருகின்ற 2026 சட்டமன்றத்தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து அரசியல் வட்டாரத்தில் இந்த…
டெல்லி : ஏப்ரல் 16 அன்று டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடியது. இந்தப்…
சென்னை : நடிகர் சந்தானம் தொடர்ச்சியாகவே ஹீரோவாகவே படங்களில் நடித்து வரும் நிலையில் மீண்டும் காமெடியனாக அவரை பார்க்க மாட்டோமா…