உக்ரைன் விவகாரம் – பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்த சசிகலா…!

Published by
லீனா

உக்ரைனில் கடந்த இரண்டு வாரங்களாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சசிகலா அவர்கள் உக்ரைனில்  இருந்து மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி தடைபடாமல் இந்தியாவில் தொடர்வதற்கு  பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து வரும் போர் இன்னும் முடிவுக்கு வராமல் இருப்பது மிகவும் கவலையடையச் செய்கிறது. உக்ரைனுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்வி பயில சென்ற இந்திய மாணவர்கள் செய்வதறியாது சிக்கி தவித்துக் கொண்டிருந்த நிலையில், இதுவரை சுமார் 18,000 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக வரும் செய்திகள் மனதிற்கு ஆறுதல் அளித்தாலும், மீதமுள்ள அனைத்து மாணவர்களும் விரைவில் மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் உக்ரைனில் என்றைக்கு நிலைமை சீராகும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அதே போன்று கல்வியை பாதியில் இழந்த இந்திய மாணவர்களின் எதிர்காலமும் என்ன ஆகுமோ என்ற கவலை அனைவரிடத்திலும் உள்ளது. இது போன்ற இக்கட்டான நிலையில், உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மாணவர்கள் அனைவருக்கும் அவர்களுடைய கல்வி தடைபடாமல், அவரவர் மாநிலத்தில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மீண்டும் கல்வியை தொடரும் வகையில் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று பிரதமரை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்திய மாணவர்கள் தங்களின் மருத்துவ கனவை எப்படியாவது நிறைவேற்றிடவேண்டும் என்று முடிவெடுத்து வெளிநாடுகளுக்கு சென்று பயிலும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அதே போன்று உக்ரைன் போன்ற வெளிநாடுகளில் குறைந்த செலவில் மருத்துவ கல்வி பெற முடிவதாக கருத்து தெரிவிக்கின்றனர். அதிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய சில மாணவர்களின் பெற்றோர்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு தங்கள் சொத்து, நகைகளை விற்று, அந்த பணத்தில், தங்கள் பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி படிக்க வைக்கின்றனர்.

மேலும், நீட் தேர்வு நடைமுறைக்கு வந்தபிறகு, அதில் உள்ள சிக்கல்களுக்கு மத்தியில் மருத்துவ இடம் கிடைக்கப் பெறாதவர்களே அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சென்று மருத்துவ கனவை நிறைவேற்றி கொள்வதாக கூறுகின்றனர். எனவே இந்த தருணத்திலாவது மாணவர்களின் மருத்துவ கனவிற்கு தடையாக இருக்கும் நீட் தேர்வை விலக்கிடும் வகையில் கொள்கை முடிவை மேற்கொண்டு, இந்திய மாணவர்கள் நம் இந்திய நாட்டிலேயே மருத்துவம் பயில தேவையான வழிவகைகளை ஏற்படுத்திட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.’ என  தெரிவித்துள்ளார்.

Recent Posts

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

என்னது ரெண்டு பேருக்குள்ள ஈகோவா? அன்பை பொழிந்து விளக்கம் கொடுத்த ஹர்திக் – கில்!

மும்பை : அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் இருவருக்கும் இடையே நடந்த…

11 hours ago
இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

இந்தியாவின் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது உண்மை! CDS அனில் சௌகான் பேச்சு!

டெல்லி : பஹல்காம் விவகாரத்தில் இந்திய ராணுவம் பாகிஸ்தானை கூறிவைத்து தாக்குதல் நடத்தியது போருக்கு வழிவகுத்தது. இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்த…

12 hours ago
பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

பிரமாண்ட ரோட் ஷோ…முதலமைச்சருக்கு மதுரை மக்கள் உற்சாக வரவேற்பு!

மதுரை : தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கும் சூழலில், தேர்தலில் பங்கேற்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கான வேளைகளில்…

13 hours ago

வாய்ப்பை இப்படி தான் பயன்படுத்தனும்! இரட்டை சதம் விளாசி சொல்லிக்கொடுத்த கருண் நாயர்!

கேன்டர்பரி : இந்திய கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இளம் கிரிக்கெட் வீரர்கள் கிடைத்த வாய்ப்புகள் எப்படி பயன்படுத்தவேண்டும் என்கிற அளவுக்கு…

13 hours ago

ராமதாஸ் ரெடியா இருக்காரு…அடுத்து அன்புமணியிடம் பேச வேண்டும் -ஜி.கே.மணி!

சென்னை :  பாமக நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு பெரிய அளவில் பேசுபொருளாக…

14 hours ago

நடிகர் ராஜேஷ் மறைவு…தனக்குத் தானே கட்டிய கல்லறையில் உடல் நல்லடக்கம்!

சென்னை : தமிழ் திரையுலகின் மூத்த நடிகர் ராஜேஷ், தனது 75-ஆவது வயதில் சென்னையில் மாரடைப்பால் காலமானார். இவருடைய மறைவு சினிமா…

15 hours ago