பிரிட்டன் ரிட்டன்: 5 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர்

Default Image

பிரிட்டனில் இருந்து இதுவரை தமிழகம் வந்தவர்களில் மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதியானது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை கிண்டியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரிட்டனில் இருந்து இதுவரை தமிழகம் வந்தவர்களில் மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஏற்கனவே, சென்னையை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிதாக சென்னை திரும்பியவர்களில் மேலும் ஒருவர், மதுரையில் ஒருவர் மற்றும் தஞ்சையில் இரண்டு பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 5 பேருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது என தெரிவித்துள்ளார். இதனிடையே, பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக பிரிட்டனுக்கு விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்