இங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம்! சீமான் ட்வீட்!

இங்கிலாந்தில் விடுதலை புலிகள் மீதான தடை நீக்கம்.
பிரிட்டனில் விடுதலை புலிகள் மீதான தடையை நீக்கி அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் தனது ட்வீட்டர் பக்கத்தில், ஒரு மகிழ்ச்சியான பதிவினை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், பிரித்தானிய நீதிமன்றம் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்கிய செய்தியறிந்து பெருமகிழ்ச்சி அடைந்தேன். அதற்காக சட்டப்போராட்டம் நடத்தி உழைத்திட்ட தமிழர்களுக்கும், உறவுகளுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பிரித்தானியாவில், தமிழீழ விடுதலை புலிகள் மீதான இத்தடை நீக்கத்தை, முன்மாதிரியாகவும், ஊக்கமாகவும் கொண்டு, யாவற்றிலும் புலிகள் மீதான தடை நீக்க சட்ட போராட்டம் செய்திடுவோம். தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!’ என பதிவிட்டுள்ளார்.