உடுமலை சங்கர் கொலை வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு.!

Default Image

கடந்த 2015-ம் ஆண்டு வேறு சமூகத்தை சேர்ந்த சங்கரும், கௌசல்யாவும் திருமணம் செய்துகொண்டனர். இதைத்தொடர்ந்து, கடந்த 2016 -ம் ஆண்டு உடுமலைப்பேட்டை பேருந்து நிலையத்தில் கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில், சங்கா் உயிாிழந்தாா். சங்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில், கௌசல்யாவின் தந்தை உட்பட 6 பேருக்கு தூக்கு தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் திருப்பூர் நீதிமன்றம் வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் குற்றவாளிகள் 5 பேரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மேலும், கவுசல்யா தந்தை சின்னசாமியை விடுதலை செய்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், உடுமலை சங்கர் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக சங்கரின் சகோதரர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்