உடுமலை கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியின் விடுதலை மற்றும் 5 பேரின் தண்டனை குறைப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு.
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட சங்கர் – கவுசல்யா திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2016-ம் ஆண்டு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பலத்த காயங்களுடன் கவுசல்யா உயிர் தப்பினார். இந்தக் கொலை வழக்கில் திருப்பூர் நீதிமன்றம் கடந்த 2017 டிசம்பரில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. பின்னர் கவுசல்யாவின் தாய் உள்ளிட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, தூக்கு தண்டனை பெற்ற 6 பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். அதில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டதுடன், மற்ற 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில், கவுசல்யாவின் தந்தை சின்னசாமியின் விடுதலை மற்றும் 5 பேரின் தண்டனை குறைப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…