ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

Published by
Rebekal
ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள செல்போன் வாங்க பணம் இல்லாததால் சாக்கடை அள்ளி பணம் சம்பாதித்த மாணவனுக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின்.
தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும் தற்போது மாணவர்களின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக அரசாங்கம் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிளிலும் ஆன்லைன் மூலமாக தற்பொழுது பாடங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால், நடுத்தர குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாவிட்டாலும் பாடம் கற்க வேண்டும். எனவே, தற்பொழுது ஸ்மார்ட்போன் அவசியம் என்ற ஒரு நிலை வந்துள்ளது.
இந்நிலையில் சென்னை அருகே உள்ள கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர் ஒருவர் செல்போன் இல்லாததால் அதற்கான பணத்தை சம்பாதிக்க கோயம்பேடு அருகே உள்ள வடிகால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் பரவி சோகத்தை ஏற்படுத்தியது. இதை அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இளைஞரணி சார்பில் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சேகர் பாபு அவர்களது ஏற்பாட்டில் நடைபெற்ற கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கான விழாவில் அந்த மாணவருக்கு லேப்டாப் பையும் அதற்கான டேட்டாவையும் வழங்கியுள்ளார். இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களில் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
Published by
Rebekal

Recent Posts

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

27 ஆண்டுகளுக்கு பிறகு இமாலய சாதனை படைத்த பாஜக! வெற்றி கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக  சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…

28 minutes ago

INDvENG : 2வது ஒருநாள் போட்டி எப்படி இருக்கும்? பிட்ச் நிலை, வானிலை நிலவரம், வீரர்கள் விவரம் இதோ..,

கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…

53 minutes ago

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : திமுக வெற்றி…கொண்டாட்டத்தில் தொண்டர்கள்!

ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…

1 hour ago

நோட் பண்ணிக்கோங்க..’ரோஹித் சர்மா தான் தாக்கத்தை ஏற்படுத்துவார்”..கெவின் பீட்டர்சன் பேச்சு!

ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…

2 hours ago

“பயிற்சி செய்வது பயனளிக்காது”.. பழைய ஃபார்முக்கு வருவதற்கு ரோஹித்துக்கு யோசனை சொன்ன சஞ்சய் பங்கர்.!

ஒடிசா : இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட…

3 hours ago

டெல்லியில் பாஜக வெற்றி! மக்களுக்கு நன்றி தெரிவித்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த பிப்ரவரி 5-ல் நடைபெற்ற  டெல்லி மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதலே ஆளும்…

3 hours ago