ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

Default Image
ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள செல்போன் வாங்க பணம் இல்லாததால் சாக்கடை அள்ளி பணம் சம்பாதித்த மாணவனுக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின்.
தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும் தற்போது மாணவர்களின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக அரசாங்கம் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிளிலும் ஆன்லைன் மூலமாக தற்பொழுது பாடங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால், நடுத்தர குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாவிட்டாலும் பாடம் கற்க வேண்டும். எனவே, தற்பொழுது ஸ்மார்ட்போன் அவசியம் என்ற ஒரு நிலை வந்துள்ளது.
இந்நிலையில் சென்னை அருகே உள்ள கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர் ஒருவர் செல்போன் இல்லாததால் அதற்கான பணத்தை சம்பாதிக்க கோயம்பேடு அருகே உள்ள வடிகால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் பரவி சோகத்தை ஏற்படுத்தியது. இதை அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இளைஞரணி சார்பில் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சேகர் பாபு அவர்களது ஏற்பாட்டில் நடைபெற்ற கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கான விழாவில் அந்த மாணவருக்கு லேப்டாப் பையும் அதற்கான டேட்டாவையும் வழங்கியுள்ளார். இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களில் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
Parvesh verma - Arvind Kejriwal
Arvind Kejriwal - Atishi
L2E EMPURAAN
Arvind Kejriwal - Manish sisodia
Seethalakshmi - NOTA
Virat kohli - Harbajan singh - Shreyas Iyer