உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது என கே.என் நேரு தெரிவித்தார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த கே.என் நேரு, ஆர்.எஸ் பாரதி, 2 நாட்களில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை முடியும். இன்னும் இரண்டு அல்லது மூன்று கட்ட பேச்சு வார்த்தைகளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக போட்டியிடும் என கே.என் நேரு, ஆர்.எஸ் பாரதி கூட்டாக பேட்டியளித்தனர். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியுடன் நாளை பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 7 கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசிக் கொண்டிருக்கிறோம். எத்தனை தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்பது பற்றிய மு.க ஸ்டாலின் அறிவிப்பார். தனிச் சின்னம் தொடர்பான விவகாரம் எங்களுக்கு கூட்டணி கட்சிகளுக்கும் உள்ள பிரச்சனை. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் சின்னம் குறித்து ஸ்டாலின் உடன் கூட்டணி கட்சி தலைவர்கள் பேசுவார்கள்.
உதயநிதி ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது என கே.என் நேரு தெரிவித்தார். வன்னியர்களுக்கான தற்காலிக உள்ஒதுக்கீடு தேர்தலுக்காகவே செய்யப்பட்டது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக இடங்களை கேட்பதில் தவறில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போதே வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு தருவதாக திமுக உறுதியளித்தது என கே.என் நேரு தெரிவித்தார்.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…