தந்தையின் நினைவாக வைத்திருந்த இருசக்கர வாகனம் களவு போனதால் மனமுடைந்த இளைஞர் தற்கொலை!

Published by
லீனா

தியாகராஜன் என்பவர், சென்னை புரசைவாக்கம், தாண்டவராயன் பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு வயது 21. இவர் பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு செல்போன் கடையில் பணிப்புரிந்து வருகிறார். இவரது குடும்பம் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பம். 

இருப்பினும், தனது மகனின் விருப்பப்படி, உயர் ரக R15 இரு சக்கரவாகனத்தை ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து அவரது தந்தை வாங்கிகொடுத்துள்ளார். இந்நிலையில், அவரது தந்தை சில மாதங்களில் உடல்நலக் குறைவால் உயிரிழந்துள்ளார். 

இதனையடுத்து, தியாகராஜன், தனது தந்தையின் நினைவாக, அவர் வாங்கி கொடுத்த இருசக்கர வாகனத்தை மிகவும் பாதுகாப்பாக வைத்துள்ளார். இந்நிலையில், கடந்த மாதம் 5-ம் தேதி, தனது வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, தியாகராஜன் வேப்பரி காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இதுதொடர்பாக காவல்துறையினர், சிசிடிவி காட்சிகளின் உதவிகளோடு குற்றவாளிகளை தேடி வந்தனர். இதனிடையே கொரோனா பாதிப்பு காரணமாக வழக்கில் தொய்வு ஏற்பட்ட நிலையில் குற்றவாளிகளை பிடிக்க காலதாமதம் ஆகியுள்ளது. 

இந்நிலையில், கடந்த ஒருமாத காலமாக இருசக்கர வாகனம் திருடு போனதால், மன உளைச்சலில் இருந்த தியாகராஜன் இன்று நண்பகல் அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேப்பரி போலீசார் வழக்குப் பதிவு செய்து உடலை கைப்பற்றி, ராஜிவ்காந்தி மருத்துவனையில் பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

சில தினங்களுக்கு முன்னதாக, அப்பாவின் நினைவாக இருந்த இரு சக்கரவாகனம் தொலைந்ததால், மனமுடைந்து விஷம் அருந்தி தற்கொலை முயன்று காப்பாற்றியதாகவும், பின்னர் போலீசார் ஊரடங்கு முடிவடைந்ததும் நிச்சயமாக  இருசக்கரவாகனத்தை கண்டுபிடித்து தருவதாக கூறியிருந்தாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Published by
லீனா

Recent Posts

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

டாஸ்மாக் விவகாரம் : வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கோரிய தமிழக அரசின் மனு வாபஸ்!

சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…

31 minutes ago

திருடப்படும் தகவல்…சீன சிப்செட் அச்சுறுத்தல்! இந்தியாவில் பழைய சிம் கார்டுகளை மாற்ற திட்டம்?

டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…

55 minutes ago

KKR vs LSG : டாஸ் வென்ற கொல்கத்தா! பேட்டிங்கிற்கு தயாரான லக்னோ!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…

1 hour ago

ஆண்களுக்கு இலவச பேருந்து பயணம் கிடைக்குமா? சட்டப்பேரவையில் சிரிப்பலை கேள்வி!

சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…

2 hours ago

காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…

2 hours ago

மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…

2 hours ago