தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனம் எரிப்பு..! இருவர் கைது..!

Default Image

தாளமுத்து நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனத்தை எரித்து சேதப்படுத்திய 2 பேர் கைது.

தூத்துக்குடி மாவட்டம், முதுகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சரவணன் (44), த/பெ.  என்பவர் தாளமுத்துநகரில் உள்ள தனது நண்பர் மாரியப்பன் என்பவரின் பாட்டி இறந்ததற்கு துக்கம் விசாரிக்க நேற்று (23.01.2022) சென்றுள்ளார். அப்போது மாரிமுத்து (32) என்பவர் குடிபோதையில் சரவணனிடம் தகராறு செய்துள்ளார். அப்போது மாரிமுத்துக்கு ஆதரவாக அவரது நண்பரான தங்கராஜ் (29),  என்பவரும் சரவணனுடன் தகராறு செய்து, தாளமுத்து நகர் மெயின் ரோட்டில் நிறுத்தயிருந்த சரவணனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து சரவணன் அளித்த புகாரின் பேரில் தாளமுத்து நகர் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி அவர்கள் வழக்குப்பதிவு செய்து எதிரிகள் தங்கராஜ் மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் கைது செய்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்