சேலத்தில் தொற்று பாதிப்பை உயர்த்தி காட்டிய இரண்டு தனியார் கொரோனா ஆய்வகங்களுக்கு சீல்.
சேலம் ஒருக்காணி வளாகத்தில் 500 ஆக்சிஜன் வசதிகளோடு கூடிய, கொரோனா சிறப்பு மையத்தின் கட்டுமான பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார். அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசிய அவர், தொற்று முடிவுகளை உயர்த்தி காண்பித்த இரண்டு தனியார் ஆய்வகங்களின் தொற்று மாதிரியை, அரசு மருத்துவக் கல்லூரியில் பரிசோதனை செய்ததில், அதில் கொரோனா பாசிட்டிவ் என காண்பிக்கப்பட்ட முடிவுகள், அரசு ஆய்வகத்தில் தொற்று இல்லை என தெரிய வந்ததாகவும், இதனையடுத்து அந்த இரண்டு தனியார் ஆய்வகங்களுக்கு சீல் வைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இனிமேல் யாரும் இந்த இரண்டு தனியார் ஆய்வகங்களுக்கு சென்று பரிசோதனை செய்ய வேண்டாம் என்றும், இனி தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். 98% தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் ஆய்வகங்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். 2% தனியார் மருத்துவமனை மற்றும் ஆய்வகங்கள் தான் தவறாக செயல்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…