தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் விபத்து! 2 பேர் பலி!

Published by
பால முருகன்

ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே இரண்டு சுற்றுலா வேன்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை வடமாநிலத்தில் இருக்கும் பெண்கள் உள்பட 40-க்கும் மேற்பட்டோர் ரமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாத சுவாமி கோவிலுக்கு சுற்றுலா வேன்களில் வந்தனர்.

கோவிலுக்கு வந்த பின் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு அதன்பிறகு  அவர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனுஷ்கோடி செல்லவும்  திட்டமிட்டிருந்துள்ளனர். இரண்டு வேன்களில் அவர்கள் சென்றுகொண்டிருந்த நிலையில், எதிர்பாராதவிதமாக தனுஷ்கோடி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கோதண்டராமர் கோவில் அருகே  இரண்டு வேன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

ராமர் கோயில் கும்பாபிஷேகம்.! ராமர் பற்றிய புத்தகங்களுக்கு கடும் தட்டுப்பாடு.!

இந்த விபத்தில் ஒரு வேன் சாலையில் கவிழ்ந்தது. மற்றோரு வேணும் பலத்த சேதமடைந்தது. இந்த விபத்தில் வேனில் இருந்த இரண்டு பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் தற்போது சிகிச்சைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்தவர்கள் வேனிற்குள் இருக்கும் மக்களை மீட்டனர். மீட்பு துறையினருக்கும் தகவலை தெரிவிக்க அவர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 10 பேருக்கு திவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும். இந்த விபத்து தொடர்பாக ராமேஸ்வரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Recent Posts

நடராஜனுக்கு வாய்ப்பு கொடுக்காதது ஏன்? மனம் திறந்த கெவின் பீட்டர்சன்!

டெல்லி : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி சிறப்பாக விளையாடி வந்தாலும் ரசிகர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய கவலைகளில் ஒன்று என்னவென்றால்,…

1 hour ago

“நாம் நமக்குள் சண்டையிடாமல் ஒற்றுமையாக இருப்போம்!” அஜித்குமார் வேண்டுகோள்!

டெல்லி : நடிப்பு , கார் பந்தயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கும் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருது வழங்கி மத்திய…

2 hours ago

கனடா தேர்தல் : 22 பஞ்சாபியர்கள், 2 ஈழ தமிழர்கள் வெற்றி!

ஒட்டாவா : 343 தொகுதிகளை கொண்ட கனடா நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. அமெரிக்காவை போலவே கனடாவிலும் தேர்தல் வாக்கெடுப்பு…

2 hours ago

2026ல் அதிமுகவுக்கு 6 இடங்கள் கூட கிடைக்காது -ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை, தீயணைப்புத்துறை மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது…

2 hours ago

சீனா: உணவகத்தில் பயங்கர தீ விபத்து…22 பேர் பலி!

லியோனிங் : ஏப்ரல் 29 அன்று, சீனாவின் லியோனிங் மாகாணத்தில் உள்ள லியோயாங் நகரின் பைடா மாவட்டத்தில் (Baita District)…

3 hours ago

பஹல்காம் தாக்குதல் : உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம்…மஹாராஷ்டிரா முதல்வர் அறிவிப்பு!

காஷ்மீர் : மாநிலம் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர்…

3 hours ago