விருதுநகர்:சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் அமைந்துள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 1 ஆம் தேதி சிவகாசி களத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.இந்த நிலையில்,விருதுநகர் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணை பகுதியில் மஞ்சள்ஓடைப்பட்டியில் உள்ள சோலை என்ற பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.இன்று காலை பட்டாசு ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த 5 பேர் வெடிவிபத்தில் சிக்கியதாக தகவல் வெளியானது.
இந்த தகவல் அறிந்து,தீயை அணைப்பதற்காக சாத்தூர்,வெம்பக் கோட்டையில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.இதனைத்தொடர்ந்து,ஆலையில் சிக்கிய 7 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டு,சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில்,சாத்தூர்,கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 7 பேரில்,2 பேர் உயிரிழந்துள்ளனர். ஆலையின் உரிமையாளர் கருப்பசாமி மற்றும் செந்தில்குமார் உள்ளிட்ட 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து,ஆலையில் மேலும் சிலர் சிக்கியுள்ளார்களா? என்று தீயணைப்பு படையினர் தொடர்ந்து மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…