மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரி & உதவியாளர் சஸ்பெண்ட்!

Published by
Rebekal

அரியலூர் மாவட்டத்தில் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் பணம் கேட்ட நெல்கொள்முதல் அதிகாரிகள் உட்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை அருகே நெல் கொள்முதல் நிலையம் ஒன்று உள்ளது. குழுமூர் எனும் கிராமத்தை சேர்ந்த வள்ளியம்மை என்பவர் 62 நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த நெல் கொள்முதல் உதவியாளர் சிவசக்தி என்பவர் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் எனும் கணக்குக்கு பணம் தரவேண்டும் என கூறி பணத்தை பெற்றுள்ளார். இதனை வள்ளியம்மை தனது உறவினரான அமுதக்கண்ணன் என்பவரிடம் மூட்டைக்கு 40 ரூபாய் என்னிடமிருந்து வாங்கினார்கள் என கூறியுள்ளார்.
எனவே,வள்ளியம்மையின் உறவினர்கள் நெல்கொள்முதல் உதவியாளர் சிவசக்தியிடம் பணம் வாங்கியதற்கான காரணம் என்ன எனக் கேட்டு அதனை வீடியோவாக எடுத்து அரியலூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக பிராந்திய மேலாளர் உமாசங்கர் மகேஸ்வரனுக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து அவர் விசாரணை நடத்தியதில் மூட்டை ஒன்றுக்கு தலா 40 ரூபாய் என வசூல் செய்த கொள்முதல் அதிகாரி வரதராஜன் மற்றும் அவரது உதவியாளர் சிவசக்தி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

நான் வீல்சேரில் இருந்தால் கூட CSK-வுக்காக விளையாடுவேன்! M.S.தோனி நெகிழ்ச்சி!

நான் வீல்சேரில் இருந்தால் கூட CSK-வுக்காக விளையாடுவேன்! M.S.தோனி நெகிழ்ச்சி!

சென்னை : கிரிக்கெட் உலகில் சில வீரர்களுக்கு அணி என்பது வெறும் விளையாட்டுகானது மட்டுமல்ல. சிலருக்கு அது ஒரு குடும்பம்…

6 minutes ago

மைதானத்தில் காலில் விழுந்த ரசிகர்! விராட் கோலியின் நெகிழ்ச்சி செயல்.! வைரலாகும் வீடியோ இதோ…

கொல்கத்தா : கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் சமயத்தில் சில ரசிகர்கள் ஆர்வ மிகுதியில் மைதானத்தில் உள்ள பாதுகாப்பை மீறி தங்கள்…

1 hour ago

ஜட்ஜ் வீட்டில் கட்டுக்கட்டாக பணம்! உச்சநீதிமன்றம் வெளியிட்ட பரபரப்பு வீடியோ! அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன?

டெல்லி : கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி டெல்லியில்  உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டில் நடந்த தீ விபத்து சம்பவம்,…

2 hours ago

CSK vs MI : சம்பவம் உறுதி! யாருக்கு ஜெயிக்க வாய்ப்பு? சென்னை., மும்பை…

சென்னை : ஐபிஎல் கிரிக்கெட் ரசிகர்கள் எதிநோக்கும் மிக முக்கிய போட்டியான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்…

3 hours ago

KKRvsRCB : கொல்கத்தாவில் வெற்றி கொடி நாட்டிய பெங்களூர்! கிங் கோலி படைத்த மிரட்டல் சாதனை!

கொல்கத்தா : இந்த ஆண்டுக்கான முதல் ஐபிஎல் போட்டி இன்று ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா…

15 hours ago

என்னை விட்டுட்டோம்னு பீல் பண்ணுங்க! கொல்கத்தாவுக்கு அதிரடி மூலம் பதிலடி கொடுத்த சால்ட்!

கொல்கத்தா : கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு சிறப்பான தொடக்கத்தை கொடுத்த வீரர்களில் பில் சால்ட் ஒருவர்.…

16 hours ago