மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் லஞ்சம் கேட்ட நெல் கொள்முதல் நிலைய அதிகாரி & உதவியாளர் சஸ்பெண்ட்!

Published by
Rebekal

அரியலூர் மாவட்டத்தில் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் பணம் கேட்ட நெல்கொள்முதல் அதிகாரிகள் உட்பட 2 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்திலுள்ள செந்துறை அருகே நெல் கொள்முதல் நிலையம் ஒன்று உள்ளது. குழுமூர் எனும் கிராமத்தை சேர்ந்த வள்ளியம்மை என்பவர் 62 நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்து கொடுத்துள்ளார். அப்போது அங்கிருந்த நெல் கொள்முதல் உதவியாளர் சிவசக்தி என்பவர் ஒரு மூட்டைக்கு 40 ரூபாய் எனும் கணக்குக்கு பணம் தரவேண்டும் என கூறி பணத்தை பெற்றுள்ளார். இதனை வள்ளியம்மை தனது உறவினரான அமுதக்கண்ணன் என்பவரிடம் மூட்டைக்கு 40 ரூபாய் என்னிடமிருந்து வாங்கினார்கள் என கூறியுள்ளார்.
எனவே,வள்ளியம்மையின் உறவினர்கள் நெல்கொள்முதல் உதவியாளர் சிவசக்தியிடம் பணம் வாங்கியதற்கான காரணம் என்ன எனக் கேட்டு அதனை வீடியோவாக எடுத்து அரியலூர் மாவட்ட நுகர்பொருள் வாணிப கழக பிராந்திய மேலாளர் உமாசங்கர் மகேஸ்வரனுக்கு அனுப்பியுள்ளனர். இது குறித்து அவர் விசாரணை நடத்தியதில் மூட்டை ஒன்றுக்கு தலா 40 ரூபாய் என வசூல் செய்த கொள்முதல் அதிகாரி வரதராஜன் மற்றும் அவரது உதவியாளர் சிவசக்தி ஆகிய இருவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

9 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

11 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago