திருவண்ணாமலை ATM கொள்ளை வழக்கில் மேலும் இருவர் கைது!

Published by
பாலா கலியமூர்த்தி

ஹரியானாவில் மேலும் 3 கொள்ளையர்கள் பதுங்கிய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என எஸ்பி கார்த்திகேயன் தகவல்.

மேலும் இருவர் கைது:

atmthiruvanamalai

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா, கோலாரியில் பதுங்கி இருந்த குர்திஷ் பாஷா மற்றும் அஷ்ரப் உசேன் ஆகியோர் தனிடையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே, ஏடிஎம் கொள்ளை வழக்கில் ஹரியானவை சேர்ந்த கொள்ளை கும்பலின் தலைவன் ஆரிப், கூட்டாளி ஆசாத் ஆகிய இருவர் கைதான நிலையில், மேலும் இருவர் கைதாகியுள்ளனர்.

இருவரை சுற்றிவளைத்த தனிப்படை:

ஹரியானா கொள்ளையர்களின் கூட்டாளிகளாக செயல்பட்ட மேலும் இருவரை சுற்றிவளைத்தது தனிப்படை காவல்துறை. திருவண்ணாமலையில் 4 ஏடிஎம்களில் அடுத்தடுத்து ரூ.73 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஏடிஎம் கொள்ளையர்கள் கர்நாடகா மாநிலம் கோலார் தப்பி சென்று அங்கிருந்து ஹரியானா சென்றது தெரியவந்தது. ஏற்கனவே, கைது செய்யப்பட்ட 2 பேரிடம் இருந்து ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

டிரக் வாகனம் மூலம் பணம் மாற்றம்:

எஞ்சிய ரூ.70 லட்சம் எங்கே பதுக்கப்பட்டுள்ளது என்பதை கண்டறிய காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது. இந்த சமயத்தில் ஏடிஎம் கொள்ளை வழக்கு தொடர்பாக மேலும் இருவரை கைது செய்துள்ளனர். கொள்ளையர்கள், கர்நாடகாவில் இருந்து அரியானா தப்பிச் செல்வதாக திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் அம்பலமானது.

இதுதொடர்பாக எஸ்பி கார்த்திகேயன் கூறுகையில், திருவண்ணாமலை ஏடிஎம்களில் கொள்ளையடித்த பணத்தை கர்நாடகாவில் இருந்து டிரக் வாகனம் மூலம் மாற்றப்பட்டுள்ளது. ஹரியானாவில் மேலும் 3 கொள்ளையர்கள் பதுங்கிய இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

4 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

4 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

5 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

8 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago