சென்னை : இரு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு முழுவதும் நிரம்பிவிட்டன.!

Default Image

சென்னையில் முக்கிய மருத்துவமனைகளான கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது.

தற்போது வரை சென்னையில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1082-ஐ தாண்டியுள்ளது. இதனால், சென்னையில் முக்கிய மருத்துவமனைகளான கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் உள்ள படுக்கைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

இதனால், இனி புதிதாக அறியப்படும் கொரோனா நோயாளிகளை அனுமதிக்க புதிய கொரோனா வார்டுகள் அமைத்தால் தான் அனுமதிக்க முடியும் என்கிற சூழல் அந்த இரு மருத்துவமனைகளில் உருவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்