கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழப்பு

Default Image

காஞ்சிபுரம் அருகே கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்ய முயன்றபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அண்மை காலமாக தமிழகத்தில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது விஷவாயு தாக்கி உயிரிழந்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றது. அந்த வகையில் காஞ்சிபுரம் அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற போது விஷவாயு தாக்கி இருவர்  உயிரிழந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை கிராமத்தில் விஷவாயு தாக்கி உயிரிழந்த லட்சுமணன் மற்றும் சுனில் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது. இருவரின் உடல்கள்  பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது .இந்த சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்