கோவையில் காய்ச்சலுக்கு இரண்டு பேர் பலி….!!!
கோவையில் டெங்கு மற்றும் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
கோவையில் நாகமணி என்பவர் (47) காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு பரிசோதனையில் டெங்கு காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. மேலும் 1 வயது குழந்தை மித்ரா காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் எங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இவர்கள் இருவரும் தொடர்ந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்துள்ளனர். இது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.