காட்டுப்பன்றி கடித்து இரண்டு விவசாயிகள் படுகாயம்..!

Published by
murugan

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள திருச்சுழி நரிக்குடி கிராமம் மற்றும் அதை சுற்றியுள்ள  கிராமங்களில் உள்ளவர்கள் விவசாயத்தை தொழிலாக செய்து வருகின்றனர்.
தற்போது பெய்து வரும் மழையால் விவசாய நல்ல நடந்து வந்தாலும் காட்டு பன்றி பயிர்களை சேதப்படுத்துவதும் , தங்களையும் தாக்குவதாகவும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நரிக்குடி நாலூரை  சார்ந்த முத்துப்பாண்டி 25 , ராஜ்குமார் 21 ஆகியோர் தங்களின்  விவசாய நிலத்திற்கு  சென்றுள்ளனர்.
அப்போது அங்கு புதரில் இருந்த காட்டுப் பன்றி ஒன்று இருவர் மீது பாய்ந்து தாக்கியது. இதில் முத்துப்பாண்டி கால்களை காட்டு பன்றி கடித்து குதறியது. முத்துப்பாண்டியை கடிப்பதை பார்த்த ராஜ்குமார் காட்டுப்பன்றி விரட்ட முயற்சி செய்தார். அதனால் ராஜ்குமார் விரலையும் கடித்துள்ளது.
இருவரின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காட்டுப்பன்றியை விரட்டியடித்தனர். அவர்களை மீட்டு அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Published by
murugan
Tags: farmerhog

Recent Posts

காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!

காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!

சென்னை : ஒவ்வொரு நடிகருக்கும் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத மிகப்பெரிய ஹிட் படங்களாக ஒரு படம் இருக்கும் என்பது…

31 minutes ago

ஐரோப்பிய ஒன்றியம் நம்மளை ஏமாத்துறாங்க! இனிமே 25% வரி..டொனால்ட் ட்ரம்ப் அதிரடி!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஐரோப்பிய ஒன்றியம் (EU) அமெரிக்காவை ஏமாற்றுவதற்காக உருவாக்கப்பட்டது என்று குற்றம்சாட்டியுள்ளார். அதிகமாக,…

1 hour ago

மெல்ல விடை கொடு மனமே…CT-தொடரிலிருந்து வெளியேறிய இங்கிலாந்து…கண்ணீர் விடும் வீரர்கள்!

லாகூர் : நடந்து கொண்டு இருக்கும் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது  ரசிகர்களுக்கும் அணி…

2 hours ago

ஈஷா மகாசிவராத்திரி – பக்தியின் மகாகும்பமேளா! சத்குருவைப் பாராட்டிய அமித்ஷா

கோவை :  ஆண்டுதோறும்  மஹா சிவராத்திரி விழா அன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஈஷா யோகா மையத்தில் நடைபெறும்…

2 hours ago

AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்

லாகூர் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இன்றயை போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் லாகூரின் கடாபி மைதானத்தில்…

9 hours ago

ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!

கோவை : ஈஷா யோகா மையத்தில் இன்று (பிப்ரவரி 26, 2025) மஹா சிவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. இந்த…

12 hours ago